விஜய் தொலைக்காட்சியின் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. இன்று பிரபலமாக இருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் ஆகியவர்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர். 45 வயதாகும் அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்ய போதிய வசதி இல்லாத நிலையில் அரசு மருத்துவமனைக்கு அவரை குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கேயும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அவருடன் நிகழ்ச்சிகளில் கலந்து வந்த கலைஞர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வடிவேலு பாலாஜி பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அவரை யார் என்றே தெரியாது என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
அவரை உங்களுக்கு தெரியாதா? நெட்டிசன்கள் அவரிடம் எகிற, நான் அவரை பார்த்ததில்லை. கலக்கப்போவது நிகழ்ச்சியில் நான் நீதிபதியாக இருக்கிறேன். ஆனால், பழைய நிகழ்ச்சிகளை பார்த்ததில்லை. இது தொடர்பாக என்னுடன் சண்டை போடுவதில் அர்த்தமில்லை. அவரின் குடும்பத்திற்காக பிரார்த்திப்போம் எனக்கூறி பஞ்யாயத்தை முடித்துள்ளார்.
சூர்யாவின் கங்குவா…
பிரேமம் படத்தின்…
பொதுவாக ஒரு…
இளையராஜா கொடுத்த…
எம்.ஜி.ஆருக்கு சிவாஜி…