Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பைனான்சியரை மிரட்டிய வடிவேலு – போலிஸ் புகாரை அடுத்து தலைமறைவு !

எலி படத்துக்கு பைனான்ஸ் செய்த ராம்குமார் என்பவருக்கு பணத்தைத் திருப்பி கொடுக்காமல் வடிவேலு மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

16a65c8b17b06d3fb709e927a3ba3e4f

எலி படத்துக்கு பைனான்ஸ் செய்த ராம்குமார் என்பவருக்கு பணத்தைத் திருப்பி கொடுக்காமல் வடிவேலு மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வடிவேலு கடைசியாக ஹீரோவாக நடித்த திரைப்படம் எலி. அந்த படத்தை சதீஷ் குமார் என்பவர் தயாரித்தார். அந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட போது வடிவேலுவின் நண்பரான ராம்குமார் என்பவர் 2015 ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.

ஆனாலும் படம் ரிலிஸான பின்னரும் அந்த பணத்தை வடிவேலுவும் தயாரிப்பாளரும் தராமல் இழுத்தடித்துள்ளனர். அதை கேட்ட போது இருவரும் சேர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சில வருடங்களுக்கு முன்னர் ராம்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்வதாக வடிவேலு தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்றுவரை பணத்தை தராமல் வடிவேலு தனது தம்பி மூலம் மிரட்டல் விடுவதாக ராம்குமார் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்து காவல் துறை விசாரணை நடத்துவதால், வடிவேலு தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top