தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக இருக்கும் செந்தில்குமாரி விஜய்யை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டதாகக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் செந்தில்குமாரி. இவர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். விஜய்யின் தீவிர ரசிகரான இவர் தன்க்கு நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றிக் கூறியுள்ளார்.
அதில்’ என்னுடைய திருமணத்துக்குப் பின்தான் நான் நடிக்கவே வந்தேன். தளபதி விஜய்யைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என நான் ஆசைப்பட்டேன். எனது சகோதரி திருப்பாச்சி படத்தில் நடித்தார். அப்போது படப்பிடிப்பின் விஜய்யை பார்க்கவேண்டுமென்று நான் சென்றேன். ஆனால் என்னை என் கணவர் தடுத்தார். மேலும் அவர் என்னைத் தள்ளிவிட்டதில் என் மண்டை உடைந்தது. ஆனாலும் நான் விஜய்யைப் பார்க்க அப்போது சென்றேன்’ எனக் கூறியுள்ளார்.
ஒரு படம்…
நடிகர் சிம்புவை…
விடாமுயற்சி திரைப்படம்…
ஷங்கர் இயக்கத்தில்…
அன்னக்கிளி படம்…