சுரேஷ் சந்திரா அறிவிப்பு: நேற்று சோசியல் மீடியாவில் ஒரு செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதாவது விஜய்யும் அஜித்தும் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொன்னார்கள் என சுரேஷ் சந்திரா கூறியதாக ஒரு செய்தி வைரலானது. விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு அஜித் வாழ்த்து சொன்னதாகவும் அஜித்திற்கு பத்ம விருது கிடைத்ததற்கு விஜய் வாழ்த்து சொன்னதாகவும் சுரேஷ் சந்திரா கூறியதாக அந்த தகவல் பரப்பப்பட்டு வந்தது.
எல்லாமே பொய்யா? : ஆனால் அப்படி நடந்திருக்க வாய்ப்பு இல்லை என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். அப்படியே இருவரும் வாழ்த்து சொன்னார்கள் என்றால் அதை வெளிப்படையாக சொல்லி இருக்கலாமே .அப்படி சொல்லி இருந்தால் வெளியில் அவர்களுடைய ரசிகர்கள் அடித்துக் கொண்டு சாக மாட்டார்கள் இல்லையா? இதை ஏன் வெளிப்படையாக அவர்கள் தெரிவிக்கவில்லை.
விடாமுயற்சிக்கு இடையூறு: இன்னொரு பக்கம் அந்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை. அப்படி இருக்கும் பொழுது திடீரென சுரேஷ் சந்திரா கூறியதாக இந்த தகவல் வெளியாகிறது என்றால் அதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. விடாமுயற்சி திரைப்படம் இன்னும் ஐந்து நாட்களில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. அந்த படத்திற்கு விஜய் ரசிகர்களால் எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதற்காக கூட இப்படி ஒரு செய்தியை பரப்பி இருக்கலாம்.
விஜய் ரசிகர்களை ஆஃப் செய்ய: பெரும்பாலும் விஜய் படம் ரிலீஸ் ஆகும் போது அஜித் ரசிகர்கள் செய்யும் சம்பவம், அஜித் படம் ரிலீஸ் ஆகும்போது விஜய் ரசிகர்கள் செய்யும் சம்பவம் என இணையமே தள்ளாடி போய்விடும். அப்படி இருக்கும் பொழுது விடாமுயற்சி திரைப்படத்திற்கு அந்த மாதிரி எந்த ஒரு இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதற்காக கூட இந்த மாதிரி ஒரு செய்தியை பரப்பி விஜய் ரசிகர்களை ஆஃப் செய்யும் பட்சத்தில் இது நடந்திருக்கலாம் என தெரிகிறது.
விஜய்யும் அஜித்தும் நண்பர்களாகி விட்டார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள் என ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் அமைதியாவார்கள் இன்னொரு பக்கம் அஜித் ரசிகர்களும் அமைதியாவார்கள் என்று தான் இந்த செய்தி பரப்பப்பட்டிருக்கிறது என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். இவர் சொல்வதைப் போல விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் யாருக்கு பிறந்த நாளாக இருந்தாலும் அதை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் உடனே பதிவிட்டு விடுகிறார்.
அப்படி இருக்கும் பொழுது 30 வருடங்களாக சினிமா துறையில் நண்பராகவும் தொழில் முனையில் போட்டியாளராகவும் இருக்கும் அஜித்திற்கு மட்டும் ஏன் தன்னுடைய வாழ்த்தை அவர் இணையதள பக்கத்தில் வெளியிடவில்லை. அதுதான் அனைவரின் சந்தேகமாகவும் இருக்கிறது. இப்படி இருக்கும் பொழுது எப்படி இருவரும் பர்சனல் ஆக பேசிக் கொண்டார்கள். அதனால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கவே முடியாது என்று தான் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…