More

மகனை இந்தியா வரவேண்டாம் என சொன்ன விஜய் – காரணம் இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக இந்தியா வர முடியாமல் கனடாவில் சிக்கியிருக்கும் மகன் சஞ்சய்யை இந்தியா வரவேண்டாம் என விஜய்யின் குடும்பம் தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

கனடாவில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்துக் கொண்டு இருக்கும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா வர முடியாமல் 3 மாத காலமாக அங்கேயே முடங்கியுள்ளார். இப்போது இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தே பாரத் திட்டத்தின் மூலம், கனடாவில் இருக்கும் இந்தியர்களை தாய்நாட்டுக்கு விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனால் சஞ்சய் விமான டிக்கெட் புக் செய்து இந்தியா வரவேண்டுமென்ற தனது ஆசையை குடும்பத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதற்கு விஜய் சம்மதித்தாலும் அவரது மனைவி சங்கீதா, அதில் இருக்கும் பாதக அம்சங்களை பட்டியலிட்டு விஜய்யை வேண்டாம் என சொல்ல வைத்துள்ளாராம். ’இப்போதைய நிலைமையின் படி கனடாவில் இருந்து இந்தியா வர ஒரு நாளுக்கு மேல் ஆகிவிடும். அப்போது கொரோனா வைரஸ் பரவல் சாத்தியம் அதிகம். அதனால் உடல் நலனே முக்கியம் நிலைமை சரியாகும்’ வரை இந்தியா வரவேண்டாம் எனக் கூறியுள்ளாராம்.

Published by
adminram

Recent Posts