தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்ற பெயரோடு வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் நன்கு அறிந்த நடிகராகவும் இருந்து வருகிறார். கொடுக்கிற கேரக்டரை அப்படியே கண்முன் நிறுத்தி மக்களின் கைத்தட்டல்களை மிக எளிதாக வாங்கக் கூடிய நடிகராகவும் இருக்கிறார் நம் மக்கள் செல்வன்.
தயாரிப்பாளர்களின் சூழ்நிலையை அறிந்து செயல்படுபவர். அதனால்தான் தயாரிப்பாளரின் ஹீரோ விஜய்சேதுபதி என்று கூட சொல்லலாம். இவரால் பெரிய அளவில் நஷ்டம் என அடைந்ததில்லை. ஆனால் டிஎஸ்பி படம் மட்டும் யாரும் எதிர்பாராத தோல்வியை தழுவி வசூலில் மண்ணை கவ்வியது. அப்போது கூட ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானார் விஜய்சேதுபதி.
இப்போது சமீபகாலமாக டான் பிக்சர்ஸ் நிறுவனம் பற்றிய பேச்சுத்தான் கோடம்பாக்கத்தில் அடிபட்டு வருகிறது. அதாவது டான் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது புதிய விதிமுறைய விதித்து நடிகர்களுக்கு சம்பளத்தை கொடுக்க திட்டமிட்டிருக்கிறது. இதே மாதிரி மற்ற தயாரிப்பாளர்களும் பின்பற்றினால் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் என கூறப்படுகிறது.
அதாவது பராசக்தி படத்தை தயாரிப்பது டான் பிக்சர்ஸ் நிறுவனம்தான். ஆரம்பத்தில் நடிகர்களுக்கு முன்பணமாக சில தொகையை கொடுத்து மீதி சம்பளத்தை பிராஃபிட் ஷேர் அடிப்படையில் பங்கிட்டுக் கொள்ளலாம் என கூறித்தான் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் நடிகர்களும் அந்தப் படத்திற்கு முதலாளிகளாக மாறிவிடுகிறார்கள். என்ன செலவு ஆகிறது? எப்படி திட்டமிட வேண்டும் என ஒரு தயாரிப்பாளராகவும் அந்த நடிகர் யோசிக்க முடியும். இனிமேல் புரோமோஷனும் நல்ல முறையில் நடக்கும். அனைத்து நடிகர்களும் புரோமோஷனுக்கு வர சம்மதிப்பார்கள்.
ஆனால் விஜய்சேதுபதி சொல்லும் போது இதுவரை அவர் படத்திற்கு சரியான புரோமோஷன் நடந்ததே இல்லையாம். கதை நன்றாக இருந்தாலும் புரோமோஷனை சரியாக என் படங்களுக்கு யாரும் பண்ணதே இல்லை என விஜய்சேதுபதி கூறியதாக சித்ரா லட்சுமணன் இந்த தகவலை கூறினார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…