படத்திற்கு படம் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் விக்ரம். இவருக்கு 58வது படம் தற்போது நடித்து வரும் படம் கோப்ரா. இந்தப்படம் மிகவும் வித்தியாசமான த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்டது. நம்பரில் விளையாடும் விக்ரத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம். கணக்கு வாத்தியார் கெட் அப்பில் அசத்த உள்ளார் விக்ரம். இந்தப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், இர்பான் பதான், கே.எஸ்.ரவிகுமார், ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட பிரம்மாண்டமான படம்.
விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்தப்படத்தின் டீசரில் விக்ரம் கணக்கு வாத்தியாராக நடித்திருக்கிறார். மேலும் வில்லனாக நடித்திருக்கும் இர்பான் பதான், நம்பரை வைத்து விக்ரம் விளையாடுகிறார் என்றும்
கூறுகிறார். டீசரை பார்க்கும் போது விக்ரம் மதி என்ற கணக்கு வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தெரிகிறது. அதேபோல் கணக்கை வைத்து விதவிதமான கெட்டப்புகளில் க்ரைம் சம்பவங்களில் ஈடுபவது போலவும், அதனைக் கண்டுபிடிக்கும் அதிகாரியாக இர்பான் பதான் நடித்துள்ளதையும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. நடிப்பில் வேற லெவலுக்கு மிரட்டி இருக்கும் விக்ரமின் கோப்ரா பட டீசர் வெளியான அரை மணி நேரத்திலேயே 4.5 லட்சம் வியூஸ்களையும், 1.69 லட்சம் லைக்குகளையும் அள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்த திரைப்படத்தை பிரபல ஓடிடி தளம் ஒன்று வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இது ஒரு பொய்யான தகவல், இதில் உண்மை இல்லை என்று செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முக்கிய காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன.
கோப்ரா படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் விக்ரம் பங்கேற்க உள்ளார்.
ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட பிரம்மாண்டமான படம். ஏற்கனவே படத்தின் டீசரும், புதுப்புது போஸ்;டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் புகைப்படம் ஒன்றை இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Suchitra: பாடகி…
மக்கள் நாயகன்…
நடிகர் திலகம்…
சினிமாவில் ஒருவர்…
Kamalhaasan: பொதுவாக…