இயக்குனர் முத்தையா இயக்கும் பேச்சி என்ற புதிய படத்தில் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் நடித்து வருகிறன்றனர்.
சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும் கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, இவரது படங்கள் தென் மாவட்டங்களில் வெற்றிகரமாக ஓடினாலும், சாதிய கருத்துகளைக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இவர் இயக்கிய தேவராட்டம் திரைப்படம் இந்த விமர்சனங்களை மேலும் வலுப்படுத்தியது. இந்நிலையில் இப்போது அவர் ஓடிடிக்காக ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் நடிக்கும் இந்த புதிய படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகாது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் சன் நெக்ஸ்ட் தளம் மற்றும் சன் டிவியில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில்…
இளன் இயக்கத்தில்…
தமிழ்த்திரை உலகில்…
இந்தியன் 2…
Kiara advani:…