நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என்பது அறிந்ததே.
நடிகர் விக்ரம்மின் மகன், துருவ் விக்ரம் வர்மா படத்தின் மூலம் அறிமுகமாகி தன் நடிப்பு திறமையை நிரூபித்துக் காட்டினார். அடுத்து அவர் தன் தந்தையுடன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதற்கடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தை தயாரிபபாளராக யாரை அணுகலாம் என விக்ரம் யோசித்தபோது மாரி செல்வராஜ் தனது முதல்பட தயாரிப்பாளரான இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷனே தயாரிக்கட்டும் என கூறியுள்லார். ஆனால் விக்ரம் சிறிது யோசித்துள்ளாராம். விக்ரம்மின் யோசனைக்குக் காரணம் பா ரஞ்சித் ஏற்கனவே இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். அதனால் துருவ் படம் பைனான்ஸ் பிரச்சனைகளால் பாதிக்கப்படுமோ என்று அஞ்சினாராம். ஆனால் மாரி செல்வராஜ் உறுதியாக இருந்ததால் பா ரஞ்சித்தே தயாரிக்கட்டும் என விக்ரம் சொல்லிவிட்டாராம்.
சூப்பர் ஸ்டார்…
செவன்த் சேனல்…
Ajith TTF…
நடிகர் ஆடுகளம்…
Kaavya arivumani:…