
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஒரு மூதாட்டி வாக்கு சீட்டில் தனது அறியாமையின் காரணமாக 2 பேருக்கு வாக்களித்து விட்டு வந்த சம்பவம் வீடியோவாக வெளியே தெரியவந்துள்ளது. இதைக்கண்ட நெட்டிசன்கள் பாட்டி பணம் வாங்கிக் கொண்டு எல்லோரும் ஓட்டு போட்டுவிட்டது என கிண்டலடித்து வருகின்றனர்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வாங்குன காசுக்கு குத்தனுமா குத்த கூடாதா….அதுக்குத்தா இரண்டு இரண்டு குத்து…. https://t.co/ao0BF1t7Td
— நானும் ரவுடி தான்….. (@MManik6264) January 2, 2020



