இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து கேப்டனாக உயர்ந்தவர் விராட் கோலி. சச்சின், தோனிக்கு பின் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர். இளம் பெண்களின் ஹேண்ட்சம் ஹீரோ. மாடல்கள், அழகிகள் என பலரும் முயன்றும் சிக்காமல், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து அனுஷ்கா சர்மா இந்த கொரோனா லாக்டவுனில் கர்ப்பிணியானார். 2021 ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவுள்ளது என விராட் கோலி முன்னரே தெரிவித்திருந்தார். மேலும், ஜனவரியில் நாங்கள் 3 பேர் என பதிவிட்டு மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்திருந்தார்.
இதையடுத்து நிறைமாத கர்ப்பிணியான அனுஷ்கா குழந்தைக்கு ஆரோக்கயமான விஷயங்களில் கவனத்தை செலுத்தி வந்தார். அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கினார். இந்நிலையில் இன்று மதியம் விராட்கோலி அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் விராட் கோலி. அவருக்கு நண்பர்கள் , ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Actress Vichithra:…
ஊடகத்துறையில் இருந்து…
Bakkiyalakshmi: இன்றைய…
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்…
தமிழ் சினிமாவில்…