ஆனாலும், 144 தடை உத்தரவை பொதுமக்களில் சிலர் சாலைகளில் சென்று வருவதை பார்க்க முடிகிறது. அதிலும், இளசுகள் இருசக்கர வாகனத்தில் ஊரை சுற்றி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி வலம் வருபவர்களை போலீசார் மடக்கி எச்சரித்து வருகின்றனர். சிலருக்கு தோப்புக்கரண போடும் தண்டனையை கொடுத்து அனுப்புகின்றனர்.
இதுஒருபுறம் எனில் கோவையில் கொரோனாவுக்கு எச்சரிக்கை விடுத்து இளசுகள் வைத்துள்ள பேனர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 31ம் தேதிக்குள் இப்பூவுலகை விட்டு வெளியே போய் விடு. இல்லையெனில் 1.4.2020 முதல் உன்னை இப்பூவுலகை விட்டே விரட்டி விடுவோம். உனக்கு பயந்து மூடவில்லை. எச்சரிக்கை விடுகிறோ என அந்த பேனரில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.
இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘எல்லாம் சரி கொரோனா வைரஸுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா?’ என கிண்டலடித்து வருகின்றனர்.
ஐந்து வயது…
ஆடுகளம் நரேன்…
Mettukudi: சுந்தர்.சி…
Actor Kavin:…
Jason sanjay:…