கணவனுக்கு மனைவி அனுப்பிய வாட்ஸ் ஆப் ஆடியோ – விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட முதியவர் !

3d926c7bc89d7ee15405a05fd69438fa

கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னை விட்டு வேறொருவருடன் சென்றுவிட்ட மனைவியின் மீது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர் வழக்கம்போல அலுவலகத்தில் இருந்து வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியபோது அவரது மனைவி ராஜஸ்ரீ வீட்டில் இல்லை.

வேல்முருகன் தனது மனைவியை காணவில்லை என அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார் அதன்பிறகு அவரது வாட்ஸ் அப்பிற்கு வந்த ஒரு ஆடியோவில் அவரது மனைவி வேல்முருகனை தனக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் தான் விரும்பிய வாழ்வை அமைத்துக் கொண்டேன் என்றும் தன்னை யாரும் தேட வேண்டாம் என்றும் கூறி இருந்தார்.

இந்த ஆடியோவை அடிப்படையாகக்கொண்டு வேல்முருகன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவர்களின் விசாரணையில் ராஜஸ்ரீ வேல்முருகனின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த சந்தோஷ் என்பவருடன் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்த சந்தோஷின் தந்தை அதிர்ச்சியில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சோகம் நகரில் நடந்துள்ளது.

 

Related Articles

Next Story