More

எல்லோரும் திணறினோம்… ஆனால் ஒரு சூப்பர் ஹ்யூமனைத் தவிர – கோலி புகழ்ந்தது யாரை தெரியுமா?

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சிறப்பாக விளையாடிய தன் சக வீரர் டிவில்லியர்ஸை கோலி வானளாவப் புகழ்ந்துள்ளார்.

Advertising
Advertising

ஷார்ஜாவில் நடந்த நேற்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி2 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்களை சேர்த்தது. இந்த இமாலய ஸ்கோருக்கு அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணமாக அமைந்தது. ஏனென்றால் போட்டி நடைபெற்ற மைதானம் அளவில் சிறியதாக இருந்தாலும் பந்துவீச்சுக்கு சாதமாக இருந்தது. இதனால் கோலி உள்பட எல்லா பேட்ஸ்மேன்களுமே ரன்கள் அடிக்க முடியாமல் திணறினர். டிவில்லியர்ஸின் அதிரடி மூலம் பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் வெற்றிக்குப் பின் குறித்து பேசிய கேப்டன் கோலி ‘ நாங்கள் 165 ரன்கள்தான் எதிர்பார்த்தோம். ஆனால் 194 ரன்கள் எப்படி வந்தது யாரால் வந்தது என்பது உங்களுக்கே தெரியும். இந்த விக்கெட்டில் ஒரே ஒரு சூப்பர் ஹ்யூமனைத் தவிர அனைவருமே திணறினோம். நான் எதிர்முனையில் நின்று டிவில்லியர்ஸின் ஆட்டத்தை ரசித்தேன்’ எனக் கோலி கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts