தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என அசத்தலான திரைப்படங்களை கொடுத்தவர்.
தற்போது படப்பிடிப்பு ஏதும் இல்லாததால் வீட்டில் முடங்கியிருக்கும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து தத்துவ மழைகளை பொழிந்து வருகிறார். ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நமக்குள் இருக்கும் விலங்கை கொல்ல முடியாது. ஆனால் அன்பாக பேசி நண்பனாய் பாவித்து “இந்த உலகத்தை துன்புறுத்தாதே ” என்று சொன்னால் அது கேட்டுக் கொள்ளும்’ என பதிவிட்டுள்ளார்.
பொதுவாக பலருக்கும்…
மும்பையிலிருந்து தமிழ்…
SundarC: இயக்குனர்…
Actor MimeGopi:…
சுந்தர் சி…