பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் சண்டை போட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவரின் நடவடிக்கைகளால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.
எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பும் அவர் செய்யும் அனைத்து காரியங்களையும் நெட்டிசன்கள் எதிர்மறையாகவே விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைத்தள பக்கங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களின் கோபத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘மாடல் அழகிகளை வைத்து விளம்பரத்திற்காகவும், பத்திரிக்கை மற்றும் செய்தி தாளுக்காக மட்டுமே போட்டோஷூட் நடத்தப்படுகிது. ஆனால், மாடல் அல்லாதவர்கள் போட்டோஷூட் நடத்தி ஏன் இந்திய பேஷன் ஷோக்களை அசிங்கப்படுத்துகின்றனர் என தெரியவில்லை. மேலும், தகுதியில்லாத, வேலையில்லாதவர்கள் போட்டோ ஷூட் நடத்துகின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார்.
Simbu: சிம்புவின்…
விஜய் டிவி…
பத்திரிக்கையாளராக இருந்து…
தமிழ் சினிமாவில்…
Cookwithcomali: பிரபல…