தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் சிறந்த இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தவர் வெற்றிமாறன்.
கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை அள்ளியது.
மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக ஒரு செய்தி முன்பு வெளியானது. எனவே, விஜய் ரசிகர்களும் இந்த காம்பினேஷனுக்கு மிகவும் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால், விஜயின் அடுத்த படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்குவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டிவிட்டரில் ரசிகர்களிடம் உரையாடிய போது விஜய் ரசிகர் ஒருவர் இதுபற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் கூறிய அவர் ‘ அவர்கள் இருவரும் இணைந்து வேலை செய்ய வேண்டும் என மிகவும் விரும்புகிறார்கள். ஆனால், அதற்கான நேரம் அமையவில்லை என்பதுதான் உண்மை. கண்டிப்பாக அடுத்த வருடம் அவர்கள் இணைந்து பணிபுரிவார்கள்’ என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்தியாவும் இலங்கையும்…
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு…
திரையுலகில் ஒவ்வொரு…
நடிகர் சிவாஜி…
Good Bad…