More

சிம்புவின் மாநாடு பட வில்லி இவரா? வெங்கட் பிரபுவின் சாய்ஸ் வொர்க் அவுட் ஆகுமா?

சிம்பு உள்ளிட்ட பலர்  நடிக்கும் மாநாடு படத்தில் முக்கியமான ஒரு வில்லிக் கதாபாத்திரத்தில் அஞ்சனா கீர்த்தி நடிக்க உள்ளார்.

Advertising
Advertising

மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் கொரோனா பீதியால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்புவோடு எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இதில் யார் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. இந்நிலையில் முக்கியமான ஒரு வில்லிக் கதாபாத்திரத்தில் அஞ்சனா கீர்த்தி என்ற நடிகை நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கதாபாத்திரம் மூலம் தனக்கு சினிமாவில் திருப்பு முனையாக அமையும் என நம்பிக்கையோடு இருக்கிறார் அஞ்சனா. இவ்வளவு பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்தில் கிட்டத்தட்ட புதுமுக நடிகையான அஞ்சனா சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார் என்ற நம்பிக்கை காரணமாக இந்த வாய்ப்பை வெங்கட் பிரபு அவருக்கு கொடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts