செல்லத்தை ஒரு மணி நேரம் அழ வச்சது யாரு! -  உண்மையை உடைத்த நயன்தாரா

3be4d4e3786f380d9ace7b0e79b9ff6c

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாகவும், லேடி சூப்பர்ஸ்டாராகவும் மாறியுள்ளார். 5 கோடி முதல் 6 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். சமீபத்தில் வெளியான தர்பார் படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஆனால், அவர் மற்றொரு பக்கம் யாருக்கும் தெரியாத ஒன்று. அவருக்கு அவரின் அண்ணன் மகள் ஏஞ்சலினாவை மிகவும் பிடிக்குமாம். முக்கிய பண்டிகை மற்றும் விழாக்களில் அவருடனே நயன் கொண்டாடுவது வழக்கம். அவள் பிறந்த பின்னரே தனக்கு அதிர்ஷடம் ஏற்பட்டு பட வாய்ப்புகள் கிடைத்ததாக நயன் கூறுகிறார்.

கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏஞ்சலீனா துபாய்க்கு சுற்றுலா சென்றுவிட்டாள். எனவே, அவளில்லாமல் நான் கிறிஸ்துமஸ் கொண்டாடினேன். அதை நினைத்து ஒரு மணி நேரம் அழுதேன் என நயன் கூறியுள்ளார்.

 

Related Articles

Next Story