ஜெயம்ரவி நடித்துள்ள பூமி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே செல்வதற்கு பின்னால் உள்ள காரணம் வெளியாகியுள்ளது.,
ஜெயம் ரவி லஷ்மன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக பூமி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ரவியின் மாமியார்தான். திரையரங்கங்கள் திறப்பதற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் இதை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முயற்சி செய்தது. ஒரே நேரத்தில் அமேசான் ப்ரைம் மற்றும் ஹாட்ஸ்டார் பிளஸ் டிஸ்னி இரண்டு நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பூமி படத்தின் தயாரிப்பாளர் 26 கோடி ரூபாய் என விலை சொல்ல, அந்த தொகை கட்டுப்படியாகாது என அமேசான் ப்ரைம் நிறுவனம் பின் வாங்கியுள்ளதாம். அதே போல ஹாட்ஸ்டார் நிறுவனமும் அந்த தொகை கட்டுப்படியாகாது என சொல்லி விலைக்குறைப்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அதுமட்டுமில்லாமல் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பை முடித்தால்தான் படம் முழு வடிவம் பெறும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இளையராஜா இசையில்…
சினிமாவில் இரண்டு…
கமல் -…
சினிமாவில் சிலரின்…
பெரிய பட்ஜெட்…