சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் இருந்து நழுவியது ஏன்?

7e0d19e5963ff2947599717da067c23d

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ’தலைவர் 168’ படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த நிலையில் இன்று அதன் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்

சென்னை திரும்பிய ரஜினியிடம் பல்வேறு கேள்விகளை கேட்க செய்தியாளர்கள் பலர் காத்திருந்த நிலையில் திடீரென செய்தியாளர்களிடம் பொங்கல் நல்வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துக்கொண்டு ரஜினிகாந்த் நழுவி விட்டார்

நாளை ’தர்பார்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தால் ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்றும் இதனை தவிர்க்கவே அவர் நழுவி விட்டதாக பத்திரிகையாளர்கள் வட்டாரங்களிலிருந்து கூறப்படுகிறது

இருப்பினும் அவர் என்ன பேட்டி கொடுத்தாலும் அதை திரித்து தலைப்பு செய்தியாக்கி டி.ஆர்.பி ரேட்டிங்கை எகிற வைக்க காத்திருந்த ஒருசில பத்திரிகையாளர்களுக்கு ரஜினியின் இந்த நழுவல் ஏமாற்றமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story