பிக்பாஸ் புகழ் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
ஆனால், இந்த புகாரை தர்ஷன் மறுத்துள்ளார். மேலும், ஒரு பார்ட்டியில் சனம் ஷெட்டி தனது பழைய காதலுடன் நெருக்கமாக இருந்தார். எனவே, அவரிடமிருந்து விலகினேன் என்றும் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து அவர்களின் காதல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், திருமணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் கேலண்டர் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டு சனம் ஷெட்டி பலவகையான போஸ்களை கொடுத்தார். ஒரு திருமணத்தில் என்னென்ன ஏற்பாடுகள் இருக்குமோ அவை அனைத்தும் அந்த போட்டோஷூட்டிற்கு தயார் செய்யப்பட்டது. இதைக்கண்டு நெகிழ்ந்து போன சனம் ஷெட்டி ‘நிஜவாழ்க்கையில் எனக்கு இப்படி திருமணம் நடக்குமா என தெரியவில்லை’ என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதேநேரம். நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் எனவும் கோபத்துடனும் கூறினார்.
கமல்ஹாசனின் மகள்…
இளையராஜா பாடலை…
கோலமாவு கோகிலா…
புலி புலி…
Ajithkumar: கோலிவுட்டின்…