நடிகர் விவேக்கின் மறைவு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதையடுத்து நேற்று அவரது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விவேக்கை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 17 ) அதிகாலை 4:30 மணியளவில் காலமானார்.
விவேக் உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் மன்சூர் அலிகான் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் அவருக்கு மாரடைப்பு இறந்துள்ளதாக மருத்துவமனை முன்பு பத்திரிக்கையாளருடன் வாக்குவாதம் செய்து கண்ணீருடன் ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில்…
இளன் இயக்கத்தில்…
தமிழ்த்திரை உலகில்…
இந்தியன் 2…
Kiara advani:…