ஆசையாக போண்டா வாங்கிய பெண் – தொண்டையில் சிக்கி பரிதாபம் !
சென்னை சூளைமேட்டில் பத்மாவதி என்ற பெண் போண்டா சாப்பிட்ட போது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
சென்னை, சூளைமேடு பகுதியில் உள்ள காமராஜர் நகரில் வசிப்பவர் கங்காதரன. இவருக்கு பத்மாவதி என்ற மனைவி உள்ளார். பத்மாவதி, தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் இருந்து போண்டா வாங்கி தமது தாயோடு சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.
அப்போது பத்மாவதியின் தொண்டையில் போண்டா சிக்கிக்கொள்ள அவருக்கு மூச்சுத்திணறல் வந்துள்ளது. இதனையடுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றுள்ளார் அவர் தாய். பத்மாவதியை சோதித்த மருத்துவர்கள்ள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது அவரது குடும்பத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்மாவதியின் மரணம் குறித்து சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பத்மாவதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.