">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வெட்கமா இல்லையா?…நாங்க குடிச்சத நீங்க பார்த்தீங்களா?.. சீறும் யாஷிகா ஆனந்த்…..
வெட்கமா இல்லையா?…நாங்க குடிச்சத நீங்க பார்த்தீங்களா?.. சீறும் யாஷிகா ஆனந்த்…..
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். நிறைய போட்டோ ஷுட், படங்கள் கமிட்டாவது என பிஸியாக இருந்த அவர் அண்மையில் கார் விபத்தில் சிக்கினார்.
அந்த விபத்தில் அவருடன் பயணம் செய்த அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடுத்தடுத்து 2, 3 சர்ஜரி செய்த பிறகு யாஷிகா தற்போது உடல் நலம் தேறி வருகிறார். அவர் நார்மல் வார்டுக்கு மாறிவிட்டார் எனவும், வீட்டிற்கு சென்றுவிட்டார் எனவும் செய்திகள் மாறி மாறி வெளிவந்து கொண்டிருக்கிறது. விபத்து நடந்த போது யாஷிகாவும், அவரின் நண்பர்களும் மது அருந்தியிருந்ததாக பலரும் கூறி வருகின்றனர்.
தற்போது யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார். தன்னால் தன் தோழி இறந்துவிட்டதாகவும், அதற்காக கடவுள் தன்னை தண்டித்துவிட்டதாகவும், இன்னும் 5 மாதங்களுக்கு தன்னால் நிற்கவோ எழுந்து நடக்கவோ முடியாது எனவும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், விபத்து நடந்தபோது தான் குடிக்கவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார் ‘சட்டம் எல்லாருக்கும் ஒன்றுதான். சில இழிவான நபர்கள் விபத்தின் போது நான் குடித்திருந்ததாக வதந்தி பரப்பி வருகின்றனர். நாங்கள் குடிக்கவில்லை என போலீசாரே உறுதி செய்துள்ளனர். குடித்திருந்தால் நான் பாரில் இருந்திருப்பேன். மருத்துவமனையில் இருந்திருக்க மாட்டேன். பல வருடங்களாகவே பொய்யானவர்கள் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இது சென்சிட்டிவான பிரச்சனை. மனிதநேயத்துடன் நடந்து கொள்ளுங்கள். இந்த வாசகர்களை கவர்வதற்காக இந்த பொய்யான ஊடகங்கள் பொய் தகவலை பரப்பி வருகின்றனர். நீங்கள் வெட்கப்பட வேண்டும். 2 வருடங்களுக்கு முன்பு என்னை பற்றி பொய்யான தகவலை பரப்பியதற்காக அவதூறு வழக்கு தொடர்ந்தேன். ஆனால், இவர்கள் வதந்திக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்’ என பதிவிட்டுள்ளார்.