">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நீங்கள் வாழும் ஜான்சி ராணி தான்: ஜோதிமணியை கலாய்த்த நெட்டிசன்கள்
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது என்றும் தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு வேதனை அளிக்கிறது என்று கூறியிருந்தார்
இந்த டுவிட்டுக்கு பதிலளித்த கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகளுக்குப் பிறகு ரஜினி பேசியதன் மறுபதிப்பே இது. மக்களின் அடையாளங்கள், உரிமைகள், உணர்வுகள் அழித்தொழிக்கப்படுவதும், மாணவர்கள் மீது ஏவப்பட்ட அரச வன்முறையும் இவருக்கு ஒரு பொருட்டே அல்ல! அச்சு அசல் பிஜேபி கருத்து. இன்னும் எதற்கிந்த முகமூடி? என்று தெரிவித்திருந்தார்.
ஜோதிமணி எம்பியின் இந்த கருத்துக்கு ஒரு நெட்டிசன், ‘கடுமையான சட்டங்களை எதிர்க்க சத்யாகிரகமே சிறந்த போராட்ட முறை என்றும் குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடுபவர்களுக்கே தனது ஆதரவு என்றும் ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். ராகுல் தெரிவித்த அதே கருத்தை தான் ரஜினி தெரிவித்துள்ளதால் ஜோதிமணி, ராகுலையும் விமர்சனம் செய்துள்ளாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன், ‘நல்லா நடு மண்டையில அடிச்சு இறக்கிற மாதிரி உங்க தலைவர் ராகுல்காந்திக்கு சொல்லி இருக்கீங்க. உண்மையிலே நீங்கள் வாழும் ஜான்சி ராணி தான் என்று தெரிவித்துள்ளார்.