யோகி பாபுவுக்கு முருகர் சிலையை பரிசளித்த கவர்ச்சி நடிகை சஞ்சனா!.. இப்படியொரு ஆசையா?..
நடிகை சஞ்சனா நடிகர் யோகிபாபுவிற்கு முருகர் சிலையை பரிசளித்துள்ள நிலையில் அவர் குடும்பத்தினரிடமிருந்து தனக்கு கிடைத்த அன்பு மற்றும் ஆசீர்வாதம் குறித்து நடிகை சஞ்சனா சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து சஞ்சனா வெளியிட்டுள்ள பதிவில், “மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும், நன்றியுணர்வுடனும் இருக்கிறேன். சுதந்திர தினத்தின் புனிதமான நாளில், யோகிபாபு சாரின் மாமியாரிடமிருந்து அழகிய வளையல்களைப் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரது அன்பு, ஆசீர்வாதம் மற்றும் எதிர்காலத்தில் எனக்கு அன்பான, கனிவான மற்றும் சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்ற அவரது மனமார்ந்த அந்தப் பரிசு அமைந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “யோகிபாபு சாரின் மனைவியிடமிருந்து புனிதமான கணபதி பப்பா மாலையையும் பெற்றேன். எனக்கு அது மிகுந்த முக்கியத்துவம் கொண்ட பரிசாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஷ்ராவண மாதத்தை முன்னிட்டு 16 திங்கட்கிழமைகள் விரதம் இருந்து வருவதாகவும் சஞ்சனா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் யோகிபாபுவின் குடும்பத்தினரின் ஆசீர்வாதம் கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

தனக்கு கிடைத்த இந்த விலைமதிப்பற்ற பரிசுகளை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என்று கூறியுள்ள சஞ்சனா, “விநாயகர் மற்றும் சிவபெருமான் எனக்கு நல்ல வாழ்க்கைத் துணையை சீக்கிரமே அமைத்துக் கொடுப்பார்கள் என நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.