டீ குடிச்சே வாழ்க்கைய ஓட்டினேன்.. சாப்பாடெல்லாம் கனவுதான்!.. சூரி சொன்ன ஃபிளாஷ்பேக்!..

 
டீ குடிச்சே வாழ்க்கைய ஓட்டினேன்.. சாப்பாடெல்லாம் கனவுதான்!.. சூரி சொன்ன ஃபிளாஷ்பேக்!..

மதுரையிலிருந்து சினிமாவில் நடிகராக வேண்டும் என்று ஆசையில் சென்னை வந்தவர்தான் சூரி. துவக்கத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே சுண்ணாம்பு அடிப்பது, பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பல வேலைளை சூரி செய்திருக்கிறார். லைட் பாய் முதல் மெக்கானிக் என சினிமாவிலும் இவர் செய்யாத வேலைகள் இல்லை.

ஒருவழியாக திரைப்படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து நடிக்க தொடங்கினார். வெண்ணிலா கபடிக் குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் அதன் பின் பரோட்டா சூரியாக மாறினார். தொடர்ந்து பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகர்கலின் படங்களில் காமெடி நடிகராக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

விடுதலை திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக நடிக்க தொடங்கிய சூரி அதன்பின் நடித்து வெளியான விடுதலை 2, மாமன், கருடன் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. தற்போது மண்டாடி என்கிற படத்தில் நடிக்க முடித்திருக்கிறார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சூரி தனது பழைய வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். ‘சாப்பாடுன்னா என்னன்னு யோசிச்ச காலமெல்லாம் இருக்கு.. என் வாழ்க்கையில் பாதி டீ குடிச்சிதான் வாழ்ந்தேன்.. டீ தான் எனக்கு சாப்பாடு.. கால சாப்பாடு, மதிய சாப்பாடு டைம் எதுவும் தெரியாது. நான் எப்ப சாப்பிடறானோ அதுதான் டைம்.. அது காலை சாப்பாடா இருக்கலாம்.. நைட்டு சாப்பாடா இருக்கலாம்.. சென்னைக்கு வந்து நான் நினைச்சது நடக்கிற வரைக்கும் நான் வேலை செஞ்சிக்கிட்டேதான் இருந்தேன். நான் பார்க்காத வேலையே கிடையாது’ என கூறியிருக்கிறார்.

From Around the web