Categories: Cinema News latest news

கமலை நம்பி ஏமாந்த டான்ஸ் நடிகை!… பிக்பாஸில் நடந்த அநியாயங்களை வெளிச்சம் போட்டு காட்டிய சம்பவம்!..

விஜய்டிவியில் ஒளிப்பரப்பாகும் பரபரப்பான நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. 5 சீசன்களை கடந்த நிலையில் 6வது சீசனுக்காக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் கமல் தொகுத்து வழங்கும் விதம் அனைவருக்கும் ஈர்க்கும் வகையில் இருப்பதால்

சனி, ஞாயிறு எபிசோடுகளுக்கு தான் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் கமல் மற்ற போட்டியாளர்களிடம் உரையாடும் விதம் , பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த அனுபவங்களால் ஈர்க்கப்பட்டு பிரபல டான்ஸ் நடிகை அபிநய ஸ்ரீ தெலுங்கில் நாகர்ஜூனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவர் விஜய் நடித்த ஃபிரெண்ட்ஸ் படத்தில் விஜயின் கிரஷாக வருவார். மேலும் நடிகை அனுராதாவின் மகளும் ஆவார்.

பங்கேற்ற இரண்டாவது வாரத்தில் எவிக்ட் ஆகி வெளியேற்றப்பட்டுள்ளார். வோட்டிங்கில் முன்னிலையில் இருந்த இவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது. மேலும் இவரை டிவியில் காட்டவே இல்லையாம். இவர் பேசுனதை காட்டவே இல்லையாம். வீட்டிற்குள் பார்சியாலிட்டி தான் நடந்தது. நாகர்ஜூனா சார் வரும் போது 4 பேரை மட்டும் தான் பேச அனுமதிப்பார்கள்.

மற்றவர்கள் யாரும் பேசக்கூடாது, ஆனால் நம்ம கமல் சார் பிக்பாஸில் அப்படி இல்லை. அவர் எல்லா போட்டியாளர்களிடமும் உரையாடுவார். சொல்லப்போனால் இவரை பார்த்து தான் நான் தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டேன். இப்படி தான் இருக்குமென்று ஏமாந்து போய்விட்டேன். மேலும் 21 பேர் இருக்கிறோம். சின்னதாக ஒரு கப் ரைஸ் தான் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். அதில் சிறிதளவு கிரேவி தான் இருக்கும். அது காணாமல் ரைஸில் எண்ணெய் ஊற்றி மிளகாய் பொடி, உப்பு பிசைந்து அதை சாப்பிடுவோம் என்று தனது வருத்தத்தை கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini