Categories: Cinema News latest news

கமலுடன் மீண்டும் இணையும் பஹத்பாசில்!…அட இது செம காம்போ!….

மலையாளத்தில் சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் பஹத் பாசில். முகத்தில் பெரிய முகபாவனைகளை காட்டாமல் கண்களாலேயே நடிக்கும் திறமை உடையவர். அவருக்கென ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. அதுவும் விக்ரம் திரைப்படத்தில் அவரின் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

விக்ரம் திரைப்படத்தில் கூட முதல் பாதியில் பஹத்பாசிலுக்கு நிறைய காட்சிகள் இருந்தது. அவரும் தனக்கு கிடைத்த வாய்ப்பில் புகுந்து விளையாடியிருந்தார். ஒருபக்கம், மலையாள திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் ஏற்கனவே, வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

விக்ரம் படத்திற்கு பின் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் பஹத்பாசில் நடிக்க வாய்ப்பிருப்பதாக அப்பட இயக்குனரே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

எனவே, விக்ரம் படத்திற்கு பின் கமல்- பஹத் பாசில் கூட்டணியை மீண்டும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இப்பட இயக்குனர் மகேஷ் நாராயணன் ஏற்கனவே மலையாளத்தில் டேக் ஆப், சி யூ சூன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா