Categories: Cinema News latest news throwback stories

நைட்டு இந்த ஹீரோக்கள் கிட்ட எல்லாம் தனியா பேசுவேன்.. வெளிப்படையாக கூறிய கீர்த்தி சுரேஷ்!..

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

அதற்கு முன்பே இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்திருந்த போதிலும் அவருக்கு வரவேற்பு கொடுத்த படமாக ரஜினி முருகன் திரைப்படம் அமைந்தது.

keerthy-suresh

அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்றார் கீர்த்தி சுரேஷ். அவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் பெரிதும் பிரபலமாக பேசப்பட்டது. நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்த தொடங்கினார் கீர்த்தி சுரேஷ். தற்சமயம் தெலுங்கு சினிமாக்களில் கொஞ்சம் கவர்ச்சி காட்டி வருகிறார்.

வெளிப்படையாக கூறிய கீர்த்தி சுரேஷ்:

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இடையில் ஒரு பேட்டியில் அவரிடம் பேசும்போது இரவு 10 மணிக்கு மேல் யார் கூட வெகுநேரம் பேசுவீர்கள் என கேட்கப்பட்டது.

keerthy suresh

அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் நடிகர் உதயநிதியுடன் இரவு பேசுவேன். அதே போல தெலுங்கு நடிகர் நானியுடன் அடிக்கடி பேசுவேன் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சினிமா உலகை கலக்கிய எம்.ஜி.ஆரின் பன்ச் வசனங்கள்!.. அப்பவே அவர் செம மாஸ்!…

Published by
Rajkumar