Categories: Cinema News latest news

யாரையும் நடிக்க விட மாட்டேன்…! ஆணவத்தில் கொந்தளித்த ரோஜா பட நடிகை…

90களில் ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மதுபாலா. ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த ’ரோஜா’ படம் தான் இவரை பெருமையின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அந்த படம் இளசுகள் மத்தியில் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியது என்று கூறலாம். அந்த அளவுக்கு ரொமான்ஸ், கதை வடிவமைப்பு, பாடல்கள் , வரிகள் எல்லாம் இதயத்தை அழகு படுத்தியது எனலாம். மேலும் நடிகை மதுபாலாவும் கதைக்கு ஏற்ற தன் நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருந்தார்.

இன்னும் இதே மாதிரி ஒரு படம் வராதா என ஏங்கும் ரசிகர்கள் ஏராளம். இந்த நிலையில் நடிகை மதுபாலாவிடம் ஒரு பேட்டியில் சந்தித்த போது ரோஜா படம் பற்றி பல தகவல்களை பகிர்ந்ததன் மூலம் சுவாரஸ்யமான ஒரு தகவலையும் கூறினார்.

இதையும் படிங்களேன் : விஜயை திணறடித்த அந்த ஒரு கேள்வி.. தளபதி கொடுத்த மாஸ் பதிலடி என்ன தெரியுமா.?!

ரோஜா படத்தில் ஒரு வேளை நீங்கள் இல்லாமல் வேறு யாராவது நடிக்க வேண்டும் என்றால் எந்த ஹீரோயினை சொல்வீர்கள் என கேட்க அதற்கு மதுபாலா யாரையும் நடிக்க மாட்டேன். மணிரத்னம் சார் படம் தவற விட மாட்டேன். மற்றும் நான் இந்த படத்தில் என்னுடைய பெஸ்டை கொடுத்திருக்கிறேன். நன்றாக பண்ணியிருக்கேன் என கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini