அவருக்கு என் மீது காதலே இல்லை. ... அந்த ரெண்டு நடிகைகள் தான்!
80 மற்றும் 90ஸ் காலகட்டங்களில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்த ராதிகா சரத்குமார் மிகப்பெரிய திரைப்பிரபலத்தை சேர்ந்த குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வந்தவர். ஆம் இவரது தந்தை எம் ஆர் ராதா மிகப்பெரிய வில்லன் நடிகராக பெரும் புகழ் பாராட்டப்பட்டவர் .

அவரது புகழின் மூலமாக திரைத்துறைக்கு வந்த ராதிகாவுக்கு தொட்டதெல்லாம் ஹிட் கொடுத்து மிகப்பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதனிடையே அவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இது ராதிகாவின் இரண்டாம் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நடிகர் சரத்குமாருக்கும் இரண்டாம் திருமணம் தான். ஆம் அவர் சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டார். அவருக்கு பிறந்த குழந்தைகள் தான் நடிகை வரலட்சுமி.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ராதிகா என்னுடைய கணவருக்கு என் மீது காதலே இல்லை அவருக்கு பிடித்ததெல்லாம் மீனா மற்றும் நடிகை குஷ்பு தான் அவர்களிடம் பேசும்போது கொஞ்சி கொஞ்சி பேசுவார். ஆனால் என்னிடம் என்ன இப்ப... எங்க போனோம்.. என்று அதட்டுவது போல் பேசுவார் என்றார் ராதிகா.
