பிரியங்கா விவாகரத்துன்னா மணிமேகலை மட்டும் ஒழுங்கா?!. அதிர வைத்த ஷகிலா!....


Cook with comali: கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களில் விஜய் டிவி பிரியங்கா மற்றும் மணிமேகலை பஞ்சாயத்து தொடர்பான செய்திகளைத்தான் அதிகம் பார்க்க முடிகிறது. விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக இருப்பவர் பிரியங்கா. அதேபோல், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மணிமேகலை.

குக் வித் கோமாளியின் எல்லா சீசன்களிலும் மணிமேகலை இருப்பார். எல்லோருக்கும் அவரை பிடிக்கவும் செய்யும். எப்போதும் ஜாலியாக பேசுவது அவரின் வழக்கம். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்காவும் கலந்து கொண்டார். அப்போது, பிரியங்காவுக்கும், மணிமேகலைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது.

பிரியங்கா அவரின் வேலையை விட்டுவிட்டு திடீரென நிகழ்ச்சியின் வீஜேவாக மாறினார். டாமினேட் செய்வது போல நடந்து கொண்டார். என்னை வெளியே அனுப்ப வேண்டும் என திட்டமிட்டே அவர் நடந்து கொண்டது போலவே எனக்கு தோன்றியது. எனக்கு தன் மானம் மட்டுமே முக்கியம் என சொல்லி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகினார் மணிமேகலை.

விஜய் டிவி நிர்வாகம் மணிமேகலையை பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்க சொன்னதால் அது முடியாது என மறுத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார் மணிமேகலை. இந்த செய்தி வெளியே பரவ துவங்கியதும் சமூகவலைத்தளங்களில் எல்லோருமே மணிமேகலைக்கே ஆதரவு தெரிவித்தனர்.

மேலும், பிரியங்காவை கடுமையாக விமர்சித்தனர். ‘பிரியங்காவின் முதல் கணவன் என் தம்பி மகன். அவன் திறமையானவன். அவனது வாழ்க்கையையே பிரியங்கா பாழாக்கிவிட்டார்’ என பாடகி சுசித்ரா சொன்னது சமூகவலைத்தளங்களில் சுற்றி வந்தது. இதைத்தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்கள் சிலர் பிரியங்காவுக்கு ஆதரவாக பேச துவங்கிவிட்டனர்.

இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிய நடிகை ஷகிலா இதுபற்றி பேசியபோது ‘எல்லோரும் பிரியங்காவோட விவாகரத்து பத்தி மட்டுமே பேசுறாங்க. மணிமேகலை அப்பா அம்மா பேச்சை கேட்காமல் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அது மட்டும் சரியா?.. நம்ம வீட்டு பெண்களுக்கு இவர்களை உதாரணமா சொல்ல முடியுமா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Admin
Admin  
Related Articles
Next Story
Share it