
Cinema News
அவரை போல நானும் பெரிய ஸ்டார் நடிகர் ஆவேனா?!.. நடிகையின் அம்மாவிடம் புலம்பிய ரஜினி….
Published on
By
கர்நாடகாவில் பஸ் நடத்துனராக வேலை செய்து சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்தவர் நடிகர் ரஜினிகாந்த். நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்தவர் பாலச்சந்தர் கண்ணில் பட்டு நடிகராக மாறினார். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துதான் அவர் திரையுலகில் அறிமுகமானார்.
அதன்பின் சில திரைப்படங்களில் வில்லனாகவும், கமல்ஹாசனின் நண்பராகவும் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கி கமலுக்கு இணையான ஹீரோவாகவும் மாறினார். இதற்காக பல அவமானங்களை அவர் தாண்டி வந்துள்ளார். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் நடிகை ஸ்ரீதேவியுடன் பல படங்களில் நடித்தார். பதினாறு வயதினிலே, மூன்று முடிச்சி உள்ளிட்ட பல படங்களிலும் ரஜினி நடித்தார்.
இந்நிலையில், ஒருமுறை ரஜினி பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவி ‘மூன்று முடிச்சி படத்தில் நடித்த போது கமல்ஹாசன் பெரிய நடிகர். ரஜினி சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அந்த படத்திற்கு கமல் பெற்ற சம்பளம் ரூ.30 ஆயிரம். எனக்கு 5 ஆயிரம். ரஜினிக்கு 2 ஆயிரம் சம்பளமாக கொடுத்தார்கள்.
ரஜினி ஒரு சிறந்த மனிதர். அன்பாக பேசுவார். எல்லோருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். என் அம்மாவுக்கு அவரும் ஒரு மகன்தான். ‘ கமல்ஹாசன் போல நானும் பெரிய ஸ்டார் ஆவேனா?’ என அம்மாவிடம் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார். கண்டிப்பாக நீங்கள் பெரிய ஸ்டார் ஆவீர்கள் என அம்மா அவருக்கு நம்பிக்கை கொடுப்பார். அவர் கூறியது போலவே ரஜினியும் பெரிய ஸ்டாராக மாறினார்’ என ஸ்ரீதேவி கூறியிருந்தார்.
கரூரில் நடந்த கோர சம்பவம் : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையின் போதும் தனது தேர்தல்...
Karur: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை குறி...
Ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித்...
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...