Connect with us

Cinema News

என்னது சதுரங்க வேட்டைக்கு முன்னாடியே அஜித் கிட்ட H.வினோத் கதை சொல்லிட்டாரா.?! இது புதுசா இருக்கே.!?

சதுரங்க வேட்டை, தீரன் படங்களை அடுத்து தான் H.வினோத் அஜித்தை சந்தித்து கதை கூறி அஜித் ஓகே செய்து, பின்னர் பிங்க் பட ரீமேக்கான நேர்கொண்ட பார்வை முடித்த பிறகு வினோத் கதையில் அஜித் நடித்தார் என்பது மட்டுமே நமக்கு தெரியும்.

ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், சதுரங்க வேட்டை படம் செய்து கொண்டு இருக்கும்போதே அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு வினோத்திற்கு கிடைத்து அஜித்தை பார்த்து கதையும் சொல்லி ஓகே வாங்கி வைத்துவிட்டாராம் வினோத்.

சதுரங்க வேட்டை பட வெளியீட்டு உரிமை, இயக்குனர் லிங்குசாமியிடம் இருந்துள்ளது. அப்போது லிங்குசாமியிடம் வினோத் அஜித்திற்கு கூறிய கதையை சொன்னதும், லிங்குசாமி இதனை நமது பட கம்பெனிக்கே செய்துவிடுங்கள் என கூறி, வினோத்திடம் கேட்காமலேயே

இதையும் படியுங்களேன் – ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் பீஸ்ட் விஜய்.! இப்போதும் வழக்கம் போல அதேதான்.!

valimai

ஒரு பொது மேடையில், லிங்குசாமி, வினோத் இயக்கத்தில் தங்கள் கம்பெனி தயாரிப்பில் ஒரு பெரிய ஹீரோ நடிப்பார் என உளறிவிட்டார். இது அஜித் காதுகளுக்கு செல்லவே அவர் டென்ஷன் ஆகிவிட்டாராம். உடனே வினோத் சந்திப்பை அப்போதே நிறுத்திவிட்டார் அஜித்.

அதன் பிறகு தீரன் படத்தை இயக்கி, பின்னர் மீண்டும் அஜித்தை சந்தித்து நடந்ததை கூறி அஜித்தை சமாதானம் செய்து தற்போது அஜித்தை வைத்து இரண்டாவது படத்தை முடித்துவிட்டு, மூன்றாவது படத்தை இயக்க தயாராகிவிட்டார் வினோத்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top