தயாரிப்பு நிறுவனம் துவங்கிய அஜித்!.. சைலண்டா சம்பவம் பண்ணிய AK!..

 
தயாரிப்பு நிறுவனம் துவங்கிய அஜித்!.. சைலண்டா சம்பவம் பண்ணிய AK!..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் அஜித் குமார். துவக்கத்தில் சாக்லேட் பாயாக காதல் படங்களில் நடித்துவந்த அஜித் ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாக மாறினார். விஜய்க்கு அடுத்து இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. விஜய் எப்போது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தாரோ அப்போது முதலே அவருக்கு போட்டி நடிகராக அஜித் வலம் வந்தார்.

ஒருபக்கம் சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்ளுவது, பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது என அஜித்துக்கு பிடிச்ச விஷயங்கள் நிறைய இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து கார் ரேஸ் போட்டியில் அஜித்தின் டீம் கலந்து கொண்டு வருகிறது. இதற்காக பெரும்பாலும் வெளிநாட்டில்தான் இருக்கிறார். இந்நிலையில்தான் அஜித் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது..

அஜித் 185 கோடி சம்பளம் கேட்பதால் அவரின் புதிய படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாலும் முன்வரவில்லை. இந்த நிலையில் அஜித் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதும் தான் நடிக்க போகும் படத்தை தானே தயாரிக்க போகிறாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அஜித் துவங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் Ajith Sports Service Company. இது சினிமா தயாரிப்புக்காக அல்ல.,

அஜித்குமார் கடந்த சில மாதங்களாகவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கார் ரேஸ் தொடர்பான டாக்குமென்டரி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை இந்த தயாரிப்பு நிறுவனம்தான் வெளியிடுகிறது.. அதற்காகவே அஜித் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியிருக்கிறார். இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் அஜித் எந்த காலத்திலும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கமாட்டார். அஜித் புத்திசாலி’ என சிரிக்கிறது கோலிவுட் வட்டாரம்.

From Around the web