ரேஸில் கடைசியா வந்தும் அஜித் செய்த தரமான சம்பவம்!.. ஏகே ஒரு ஜென்டில்மேன்!..

 
ரேஸில் கடைசியா வந்தும் அஜித் செய்த தரமான சம்பவம்!.. ஏகே ஒரு ஜென்டில்மேன்!..

நடிகர் அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். சிறுவயதிலிருந்தே அஜித்துக்கு பைக் மற்றும் கார் ரேஸ் ஆகியவற்றில் அதிக ஆர்வம் உண்டு. மோட்டார் ஸ்போர்ட்ஸில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவரிடம் இருந்தது. அதேநேரம் திருமணத்திற்கு பின் அவரை கார் ரேஸில் ஈடுபட அவரின் மனைவி ஷாலினி அனுமதிக்கவில்லை.

தற்போது பல நாடுகளில் நடக்கும் கார் ரேஸ்களில் அஜித்தின் டீம் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. துபாய், ஐரோப்பிய நாடுகள், மலேசியா ஆகிய நாடுகளில் நடந்த கார் ரேஸ்களில் அஜித் டீம் கலந்து கொண்டது. தற்போது துபாயில் மீண்டும் கார் ரேஸ் துவங்கியிருக்கிறது
. துபாயில் கார் ரேஸ் நடக்கும் மைதானத்திற்கு பல ரசிகர்களும் அஜித்தை பார்ப்பதற்காகவே செல்கிறார்கள்.. அதில் பலரும் அஜித்துடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறார்கள்..

இந்நிலையில்தான் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.. சமீபத்தில் நடந்த கார் ரேஸ் போட்டியில் அஜித் கடைசியாக வந்திருக்கிறார். அதாவது தோல்வி அடைந்திருக்கிறார்.. அந்த நேரம் பார்த்து அவரிடம் போட்டோ எடுப்பதற்காக 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

இதைத் தெரிந்து அஜித் தோற்றுப் போன மனநிலையிலும் அவர்கள் எல்லோரிடமும் தனித்தனியாக நின்று போட்டோக்கு போஸ் கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தி அனுப்பி வைத்தாராம். இது தொடர்பான சில புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களிலும் வெளியானது.

From Around the web