Categories: Cinema News latest news

அமலா பாலுக்கு பாலியல் தொல்லை..? முன்னாள் காதலர் அதிரடி கைது.!

நடிகை அமலா பால், கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் மனஸ் தாபம் ஏற்பட்டதால், பரஸ்பரம் விவாகரத்து பெற்று கொண்டனர்.

அதன் பின்னர் ஏ.எல்.விஜய்க்கு பெண் மருத்துவர் உடன் திருமணம் நடைபெற்று தற்போது ஓர் குழந்தை உள்ளது. நடிகை அமலா பால், ராஜஸ்தானை சேர்ந்த பவ்நீந்தர் சிங் என்பவரை காதலிப்பதாக கூறப்பட்டது. இருவரது போட்டோக்களும் இணையத்தில் தீயாய் பரவியது.

இதையும் படியுங்களேன்  – அவர் இல்லை என்றலும் நான் இந்த இடத்திற்கு வந்திருப்பேன்… தளபதி விஜய் கூறிய ஷாக்கிங் தகவல்.!

அதன் பின்னர் எதோ காரணங்களால் இதுவும் நிலைக்காமல் போய்விட்டது. அந்த சமயம் ,2018இல் அமலாபால், விழுப்புரம் மாவட்ட எஸ்.பியிடம் ஒரு புகார் அளித்திருந்தார். அதவாது, பவிந்தர் சிங்,  தன்னை தனது வீட்டில் பாலியல் துன்புறுத்தியதாகவும், பண மோசடி செய்ததாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்துள்ளார்.

இதையும் படியுங்களேன்  – மாஸ்டர் படத்தில் பூனை… தளபதி 67 இல்.? மலையாளத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.!

இதுகுறித்து பவிந்தர் சிங்கை தேடி வந்த காவல்துறை, புதுசேரியில் இன்று அவரை கைது செய்துள்ளாது. அமலா பால் கொடுத்த புகாரின் பேரில் அவரிடம் தற்போது அடுத்தகட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.

Manikandan
Published by
Manikandan