">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பாய்ஸ் படத்தால் இமேஜ் டேமேஜ் ஆனப்ப நான்தான் தூக்கிவிட்டேன்! – ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய தயாரிப்பாளர்
பாய்ஸ் படத்தால் இமேஜ் டேமேஜ் ஆனப்ப நான்தான் தூக்கிவிட்டேன்! – ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய தயாரிப்பாளர்
சுஜாதா கதை வசனத்தில் விக்ரமை வைத்து ஷங்கர் இயக்கிய திரைப்படம் அந்நியன். இப்படம் 2005ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். விக்ரம் நடித்த வேடத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
இந்நிலையில், அந்நியன் பட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் ‘அந்நியன் படத்தின் தயாரிப்பாளராக அப்படத்தின் ரீமேக் உரிமை என்னிடம் உள்ளது உங்களுக்கு தெரியும். என்னிடம் உரிமம் பெறாமல் நீங்கள் அந்நியன் படத்தை ரீமேக் செய்யும் பணியில் இறங்கியிருப்பது என்னை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பாய்ஸ் படத்தால் உங்கள் இமேஜ் டேமேஜ் ஆகி நீங்கள் மன அழுத்தத்தில் இருந்த போது அந்நியன் படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்து உங்களை நான்தான் மேலே தூக்கிவிட்டேன். அதை நீங்கள் மறந்துவிட்டு ஹிந்தியில் அந்நியன் பட ரீமேக்கை இயக்கும் வேலையில் இறங்கியுள்ளீர்கள். இது சட்டத்திற்கு புறம்பானது. அந்நியன் ரீமேக் பட வேலைகளை நிறுத்துங்கள். இல்லையேல் சட்டரீதியான நடவடிக்கைக்கு உள்ளாவீர்கள்’ என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.