">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்களுடன் அர்ச்சனா – வைரல் புகைப்படம்
வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்களுடன் அர்ச்சனா – வைரல் புகைப்படம்
கடந்த 20 வருடங்களாக தொலைக்காட்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் அர்ச்சனா. அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்க தற்போது நடைபெற்று வரும் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அன்புதான் என் ஆயுதம் என கூறினாலும் அவருக்கென நிஷா, ரமேஷ், ரியோ, கேப்ரியல்லா, சோம் சேகர் என தனி க்ரூப்பை உருவாக்கிக்கொண்டு ஆதி, பாலா உள்ளிட்ட சிலர் மீது வெறுப்பு காட்டி வந்தார். எனவே, நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அவரை அவரது வீட்டினர் உற்சாகமாக வரவேற்கும் வீடியோவும் வெளியானது.
இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ரமேஷ் மற்றும் நிஷாவை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்தான்’ என பதிவிட்டுள்ளார்.