">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மீண்டும் மாநாட்டுக்கு வந்த சிக்கல்! சிம்புவின் புது ஐடியா!
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு திரைப்படம் கொரோனா ஊரடங்கால் புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு திரைப்படம் கொரோனா ஊரடங்கால் புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
பல தடைகள் மற்றும் தாமதத்துக்குப் பிறகு மாநாடு படம் ஒருவழியாக தொடங்கி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வேளையில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனாவுக்குப் பின் படப்பிடிப்புகள் தொடங்கினாலும், குறைந்த அளவிலான நபர்களை வைத்தே படப்பிடிப்பை நடத்த முடியும் என தெரிகிறது.
ஆனால் மாநாடு படத்தில் படம்பிடிக்கப்பட வேண்டிய காட்சிகளோ குறைந்தது 200 முதல் 300 பேர்களைக் கொண்டு காட்சிப்படுத்த வேண்டியவையாம். அதனால் சிம்பு கொடுத்த புதிய யோசனையின் படி மாநாடு படத்துக்கு முன்னதாக அதே படக்குழுவினர் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்க இருக்கிறார்களாம். அதில் சிம்பு, எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க, வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சியே தயாரிக்க இருக்கிறாராம். இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது.