Connect with us

Cinema News

எவன்கிட்டயும் நான் போய் சான்ஸ் கேட்க மாட்டேன்… சினிமாவால் கடுப்பாகி பாலச்சந்தர் எடுத்த முடிவு!..

பல நட்சத்திரங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர்களில் முக்கியமானவர் பாலச்சந்தர். தமிழ் சினிமாவில் தற்சமயம் பெரும் பிரபலமாக உள்ள பல நடிகர்களை தமிழ் சினிமாவில் வளர்த்துவிட்டவராக இயக்குனர் பாலச்சந்தர் இருப்பதால் அவருக்கு சினிமாவில் எப்போதுமே நல்ல மரியாதை இருந்து வந்தது.

இதையும் படிங்க:சிவகார்த்திகேயன், யோகிபாபு ரெண்டு பேருமே கை விட்டுட்டாங்க… நம்பி ஏமாந்த ப்ளாக் பாண்டி!..

முக்கியமாக ஆரம்பக்கட்டத்தில் கமல் ரஜினிகாந்த் போன்ற பெரும் நடிகர்கள் வளர்ந்து வருவதற்கு பாலச்சந்தர் வெகுவாக உதவியுள்ளார். பாலச்சந்தர் ஆரம்பக்கட்டத்தில் நாடகங்கள் மீதுதான் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

நாடகங்களில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெறலாம் என முடிவெடுத்தார் பாலச்சந்தர். ஆனால் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெறுவது என்பது நாடகத்தில் நடிப்பது போன்று எளிதாக நடக்கவில்லை. அதற்கு அவர் வெகுவாக கஷ்டப்பட வேண்டி இருந்தது.

இதையும் படிங்க:எம்ஜிஆரை அடித்த நபர்.. அப்புறம் நடந்தது தான் மாஸ்..

பாலச்சந்தர் எடுத்த முடிவு:

பல தயாரிப்பாளர்களின் அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது பாலச்சந்தரின் சுய மரியாதையை பெரிதும் பாதித்தது. எனவே இனி சினிமாவில் எந்த தயாரிப்பாளர் அலுவலகத்திற்கும் படி ஏறி இறங்க கூடாது என முடிவெடுத்தார் பாலச்சந்தர்.

K.Balachandar

அதன் பிறகு திரும்ப நாடகத்திற்கே சென்ற பாலச்சந்தர் அங்கு பெரும் முக்கியமான இடத்தை பிடித்தார், அதன் பிறகு பாலச்சந்தரை தேடி தயாரிப்பாளர்கள் வர துவங்கினர். இந்த விஷயத்தை அவரது நண்பர் பிரமிடு நடராஜன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க:கண்ணாதாசனுக்கு அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா?!.. இவ்வளவு கதை இருக்கா!..

 

Continue Reading

More in Cinema News

To Top