Balan the boy: ரசிகர்களை கவராத பாலன் தி பாய்...
மலையாள திரையுலகில் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் மஞ்சுமல் பாய்ஸ். மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 200 கோடிக்கு மேல் வசூலை பெற்றது. தமிழில் கமல்ஹாசன் நடித்த குணா படத்தின் ரெபரன்சை வைத்து எடுக்கப்பட்ட அந்த படத்தில் கண்மண் அன்போடு என்ற பாடலையும் வைத்திருந்தனர். இந்த படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் சிதம்படம் இயக்கத்தில் சமீபத்திஒல் வெளியாகியுள்ள படம் பாலன் தி பாய். மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜீத்து ஜோசப் கதை என்பதால் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. க்ரைம் திரில்லரில் உருவான இப்படத்தை தமிழில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

மலையாளத்தில் சுமாரான வரவேற்பு கிடைத்துள்ள இந்த படத்திற்கு தமிழகத்தில் சுத்தமாக வரவேற்பு இல்லை. பல திரையரங்குகள் காற்று வாங்குகின்றன. காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. மொத்ததில் இந்த் அபடம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியையே தழுவும் என்று பலரும் கூறுகின்றனர்.
