Categories: Cinema News latest news

முதல் முறையாக ஒரு நடிகையை பற்றி பெருமையாக பேசிய பயில்வான் ரெங்கநாதன்..! அந்த அதிர்ஷ்டசாலி நடிகை யார் தெரியுமா…?

பிரபல தமிழ் பட நடிகரும் பத்திரிக்கையாளருமான நடிகர் பயில்வான் ரெங்கநாதன். இவர் தமிழில் ஏகப்பட்ட சினிமா படங்களில் நடித்துள்ளார். அதே நேரத்தில் பத்திரிக்கை துறையிலும் பணிபுரிகிறார். பிரபல யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் அவ்வப்போது சினிமா நடிகைகளின் அந்தரக்கத்தை அடிக்கடி சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். இதற்காக இவர் மீது ஏகப்பட்ட போலீஸ் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் வேலையை தொடர்ந்து கொண்டு தான் வருகிறார். எப்பவுமே நடிகைகளை பற்றி தப்பான எண்ணங்களை மக்கள் மத்தியில் திணித்து வரும் இவர்

முதல் முறையாக ஒரு நடிகையை பற்றி பெருமையாக பேசியுள்ளார். அவர் வேறு யாருமில்லை. நடிகை நதியா தான். கவர்ச்சியை மட்டும் நம்பாமல் திறமை நடிப்பை மட்டும் நம்பி சினிமாவிற்கு வந்து சாதனை படைத்தவர் தான் நதியா. நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு சரியான போட்டியாக நதியா நடித்திருப்பார்.

அந்த மாதிரி நடிகை இன்ன வரைக்கும் சினிமாவில் பார்க்க முடியாது. இப்படி பட்ட நடிகைங்க மாலத்தீவில் ஆட்டம் போட்டால் திட்டத்தான் செய்வேன். நதியா, சுபலட்சுமி போன்றோர் மாதிரி இருந்தால் பாராட்டத்தான் செய்வேன் என கூறினார். எல்லா நடிகைகளையும் திட்டிக் கொண்டே இருக்கிறீர்களே யாரையும் பாராட்ட மாட்டீர்களா ? என கேட்கும் கேள்விகளுக்கு பதில்தான் நதியா, சுபலட்சுமி, சரிதா என கூறி முடித்தார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini