கண்ணாடி கழட்டிடலாமா? BODY நெருப்புக்குள் போகும்போது - வேதனையின் உச்சத்தில் பார்த்திபன்!
தன்னுடைய குரு பாக்யராஜின் மரண செய்தியை கேட்டு ஓடோடி வந்த அவரது சிஷ்யனான பார்த்திபன் அவர்கள் கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக அந்த சாவு வீட்டிலேயே இருந்து தன்னுடைய குருவுக்கு செய்ய வேண்டிய அனைத்து இறுதி சடங்குகளையும் செய்து முடித்து விட்டுத்தான் சென்றார்.
அனைத்து மீடியாக்களிலும் பேசும் நபராகவும் அந்த இறப்பு வீட்டில் பார்த்திபன் தென்பட்டார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பாக்கியராஜின் கடைசி நிமிடங்கள் வரை நடந்தது என்ன என்பது குறித்து பேட்டியில் கூறியிருக்கிறார்.
அப்போது கண்ணாடி அணிந்தபடியே பாக்யராஜின் உடல் இருந்ததை பார்த்து அவரது மனைவி பூர்ணிமா கண்ணாடியை காட்டி விடலாமா என என்னிடம் கேட்டாங்க. அவர் இறந்துவிட்டார் என்பதை கூட அவரது மனைவியால் ஏத்துக்குவே முடியல. எங்க கண்ணாடி நெருப்புல போகும்போது உடைந்து அவருடைய முகங்களை கிழிச்சிடுமோ அப்படிங்கற ஒரு பயத்துல கண்ணாடியை கழட்டலாமா? என்று கேட்டார்.

அதற்கு உடனே நான் இல்ல இல்ல..... அது அப்படியே இருக்கட்டும் விடுங்க என்று சொன்னேன். அந்த அளவுக்கு அவர் இறந்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என கூறினார். மேலும் பேசிய பார்த்திபன் அவர்கள் என்னுடைய டைரக்டர் பாக்யராஜின் உடல் நெருப்புக்குள்ள போகும்போது அந்த கடைசி நிமிடம் அத பாக்குற திராணியே என்னோட உடம்புல சுத்தமா இல்லவே இல்ல .
அது ரொம்ப கொடுமையா இருந்துச்சு. எனக்கு உடல்ல நிறைய பிரச்சனை இருக்கு என்னால ரொம்ப நேரம் நிக்க முடியாது. எங்கேயுமே ஓட முடியாது. ஆனால் அவருடைய இருப்பில் ஜெமினி பிரிட்ஜில் தூரம் ஓடினேன். அந்த இரண்டு நாட்களாக என் கால்கள் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. இது எல்லாம் எப்படி நடந்தது என்று கூட எனக்கு தெரியவில்லை என தன்னுடைய வேதனையின் உச்சத்தை பகிர்ந்துக்கொண்டார் பார்த்திபன்.
