
Cinema News
ரசிகர்கள் தூங்கிட்டு இருக்கும்போது நான் அப்படி செஞ்சது தப்புதான்- பாரதிராஜா கொடுத்த வித்தியாசமான பதில்!
Published on
பாரதிராஜா தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர் இயக்குனராக திகழ்ந்தவர். அதுவரை வழக்கமான ஹீரோயிச கதைகளே வெளிவந்துகொண்டிருந்த தமிழ் சினிமாவில் கிராமங்களை நோக்கி கேமராக்களை திருப்பியவர். அவரது முதல் திரைப்படமான “16 வயதினிலே” திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையையே உண்டு செய்தது.
Bharathiraja
இப்போதும் கூட பாரதிராஜாவின் ரசனை இளமையாகவே இருக்கிறது. சமீபத்தில் வெளியான “மாடர்ன் லவ் சென்னை” வெப் சீரீஸில் ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அத்திரைப்படம் இன்றைய இளைஞர்களை கவரும் வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை பேட்டியில் பாரதிராஜாவிடம் “உங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம். அதற்கு மிகவும் சுவாரஸ்யமான ஒரு பதிலை பாரதிராஜா அளித்தாராம்.
Bharathiraja
அதாவது, “ஓரு டெக்னீசியன் என்ற முறையிலே இந்த திரையுலகில் பல அற்புதமான விஷயங்களை நிகழ்த்திக் காட்ட முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருந்தது. அதே போல் திரை ரசிகர்கள் எப்போது முழித்துக்கொண்டு இருக்கிறார்கள், எப்போது தூங்குவார்கள் என்பதும் எனக்கு நன்றாக தெரியும்.
அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது சுமாரான படங்களையும் அவர்கள் விழித்துக்கொண்டிருக்கும்போது நல்ல படங்களையும் கொடுத்தோம் என்றால் நமக்கு பாதிப்பு இருக்காது. ஆனால் நான் மாற்றிக்கொடுத்துவிட்டு பல சமயங்களில் மாட்டிக்கொண்டிருக்கிறேன். இது என்னுடைய பலத்தின் பலவீனம்” என்று கூறினாராம். இந்த பதில் பலரையும் ரசிக்கவைத்ததாம்.
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...
Karur: தற்போது தமிழ் நாட்டு அரசியல் களமே பரபரப்பாக இருக்கின்றது.ஒட்டுமொத்த ஆளுங்கட்சி அமைச்சர்களும் கரூரை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். நேற்று கரூரில் நடந்த...
TVK Vijay: நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு...
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...