Connect with us
akshara

latest news

அழுகை மற்றும் ஆத்திரத்தில் அக்‌ஷரா…. என்ன நிகழும் இன்று பிபி வீட்டில்…..?

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று திரும்பிய போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

ஸ்கூல் வார்டன் ஆக இருக்கும் சிபி தனது டாஸ்க்கை செய்த போதும் அக்‌ஷரா அவரை மிகவும் கோபத்துடன் எதிர்கொள்கிறார். இந்த டாஸ்கில் சிபி அக்ஷராவை தொடர்ந்து வேலை வாங்குவது போல் தெரிந்தாலும் அவர் தன் டாஸ்கை முழுமையாக நிறைவேற்றுகிறார். ஆனால் இதை தவறாக புரிந்து கொண்டு அக்ஷரா சிபி மீது மிகவும் கோபம் கொண்டு ஆத்திரத்துடன் பேசுகிறார்.

sibi

சிபி அக்ஷரா வை ஸ்டீம் பண்ண சொல்லும் பொழுது அக்ஷரா கோபத்துடன் எத்தனை வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது என்று சண்டை செய்கிறார். சிபி அக்ஷரா வை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.ஆனால், அக்ஷரா மிகவும் கோபத்துடன் எதிர்கொள்கிறார் சிபியை.

இதனால், மனமுடைந்த அக்ஷரா ” இனிமே நீ சொல்லுற எதையும் செய்ய முடியாது, முடிஞ்சது பார்த்து கொள்” என்று கோபத்துடன் வீட்டில் உள்ள பொருட்களை உடைக்கிறார். சிபி அக்ஷரா விடம் நான் என் வேலைகளை மட்டுமே செய்கிறேன் உன்னை தனியாக எதுவும் கார்னர் செய்யவில்லை என்று கூறுகிறார்.ஆனால், இதை ஏற்க மறுத்த அக்ஷரா நான் உன்னுடன் பேச விரும்பவில்லை என்று கூறி சிபியிடம் பேசுவதை தவிர்த்து விடுகிறார்.

akshara

உச்சகட்ட கோபத்தில் அக்ஷரா தனியாக பாத்ரூமுக்கு சென்று அழுகிறார். இதனால், வீட்டில் உள்ள அனைவரும் அக்ஷரா வை சமாதானம் செய்ய முயல்கின்றனர்.ஆனால், அக்ஷரா கோபத்துடன் உள்ளார். யார் பேசுவதையும் கேட்க மறுத்து விடுகிறார்.

அக்ஷரா தொடர்ந்து கண்ணிர் விடுவதை கண்ட கண்ட பிக்பாஸ் அக்ஷரா வை கன்பஷன் ரூம்க்கு அழைக்கிறார். ஆனால், அக்ஷரா கன்பஷன் ரூமுக்கு அழுது கொண்டே செல்கிறார்.

எனவே, இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top