">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தலையில் பாய்ந்த குண்டு.. ரத்தவெள்ளத்தில் சரிந்த பெண் போலீஸ்… பகீர் பின்னணி
டெல்லியில் பெண் போலீஸ் ஒருவர் சக போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பத்பர்கஞ்ச் தொழிற்பேட்டை பகுதியில் உதவி ஆய்வளாரக பணிபுரிந்து வந்தவர் ப்ரீத்தி அஹல்வாத். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அவரின் தலையில் யாரோ சுட்டனர். குண்டு அவரின் தலையில் புகுந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
டெல்லியில் தற்போது பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. எனவே, இந்த சம்பவம் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணையில் சக காவல் அதிகாரி தீபன்ஷூ ரதி என்பவரே அவரை சுட்டுக்கொலை செய்தது தெரிய்வந்துள்ளது. ப்ரீத்தியை சுட்டுவிட்டு அவரும் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார்.
இருவரும் ஒன்றாக பணிபுரிந்துள்ளனர். ப்ரீத்தி மீது தீபன்ஸூக்கு காதல் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், அவரின் காதலை ப்ரீத்தி ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் ப்ரீத்தியை சுட்டுக்கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.