கேங்கர்ஸ் ஃபிளாப் ஆனதுக்கு காரணமே சுந்தர்.சி-தான்!. கடுப்பான வடிவேலு!...

 
கேங்கர்ஸ் ஃபிளாப் ஆனதுக்கு காரணமே சுந்தர்.சி-தான்!. கடுப்பான வடிவேலு!...

Vadivelu: தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக இருந்தவர் வடிவேலு. ராஜ்கிரண் தயாரித்து, நடித்த என் ராசாவின் மனசிலே படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல படங்கலிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அவற்றில் பெரும்பாலானவை கிராமம் சார்ந்த கதைகளாகும். அதுதான் வடிவேலுவுக்கும் செட் ஆனது.

ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறி ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளம் என்கிற அளவுக்கு முன்னேறினார். நல்ல நடிகர் என்றாலும் அதிக தலைக்கணம் கொண்டவர் வடிவேலு. அதோடு, யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார். மேலும், தன்னோடு நடிக்கும் காமெடி நடிகர்களை மிகவும் மோசமாகவே நடத்துவார்.

கேங்கர்ஸ் ஃபிளாப் ஆனதுக்கு காரணமே சுந்தர்.சி-தான்!. கடுப்பான வடிவேலு!...

அதனால்தான் வடிவேலு 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தபோது அவரை பற்றி அவருடன் நடித்த பலரும் கழுவி ஊற்றினார்கள். அவருடன் நடித்த போண்டா மணி, அல்வா வாசு, பாவா லட்சுமணன் போன்றவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதும் வடிவேலு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. சினிமாவில் காமெடி நடிகன், நிஜவாழ்வில் சுயநலமும், காழ்ப்புணர்ச்சியும், பொறாமையும் கொண்ட ஒரு மனிதர் என்பதுதான் வடிவேலுவின் அடையாளமாக இருக்கிறது. சொந்த பிரச்சனை காரணமாக விஜயகாந்தை அவர் எப்படியெல்லாம் திட்டினார் என்பதே அவரின் குணத்திற்கு பெரிய உதாரணம்.

கேங்கர்ஸ் ஃபிளாப் ஆனதுக்கு காரணமே சுந்தர்.சி-தான்!. கடுப்பான வடிவேலு!...

4 வருட இடைவெளிக்கு பின் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்கிற படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார் வடிவேலு. அந்த படம் ஒடவில்லை. எனவே, மீண்டும் காமெடி நடிகராக நடிக்க துவங்கினார். ஆனால், முன்பு போல அவரை யாரும் கூப்பிடவில்லை. எனவே, கிடைக்கும் படங்களில் மட்டும் நடித்து வந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் சீரியஸான வேடத்தில் நடித்தார்.

வடிவேலுவை வைத்து வின்னர், கிரி போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த சுந்தர்.சியின் இயக்கத்தில் கேங்கர்ஸ் என்கிற படத்தில் வடிவேலு நடித்தார். இந்த படத்தில் சுந்தர்-.சியே ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தின் காமெடி ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. எனவே, படம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், நான் நடித்த பல நல்ல காமெடி காட்சிகளை சுந்தர்.சி இந்த படத்தின் வைக்கவே இல்லை. அதனால்தான் படம் ஓடவில்லை என தன்னுடைய நெருங்கிய நட்பு வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம் வடிவேலு.

From Around the web